சென்னை பல்லாவரம் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது-40) இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி (வயது-38) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ராஜலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் ஷீ தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
கணவர் பெருமாளுக்கு மனைவியின் கள்ளகாதல் விவகாரம் தெரிய வந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ராஜலட்சுமி தனது வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்தபோது, வெளியில் சென்றிருந்த கணவர் பெருமாள் திடீரென வீட்டிற்கு வந்தபோது, கள்ளக்காதல் ஜோடி இருவரும் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். கணவர் வெகுநேரமாக கதவை தட்டிய பிறகு, கள்ளக்காதல் ஜோடி இருவரும் அரை குறை ஆடையுடன் கதவை திறந்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட கள்ளக்காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பெருமாள் தனது மனைவிக்கு புத்திமதி கூறியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, தனது உடலில் தானே மண்ணெண்ணை ஊற்றி, தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லாவரம்
அங்கு 90சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் இறந்த ராஜலட்சுமி உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Must Read : சோனியா காந்தி உதவியாளர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - சுரேஷ்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.