மத்திய அரசு வழங்கி வந்த இலவச தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அதில் 2.6 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி, 40 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி. சிறுவர்களுக்கு வழங்கப்படும் ‘கோர்பி வேக்ஸ்’ தடுப்பூசி கையிருப்பில் இல்லை. மத்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவிட்டது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 20% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் ஆர்வம் குறைந்துள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Ma subramanian, Nasal Vaccine