நிமிர்ந்து நில் படப்பாணியில் அம்பத்தூரில் அரசு ஆவணங்களை போலியாக தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் சிலர் அதிக பணத்திற்காக அரசுதுறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் தொடர்பான ஆவணங்களை பத்திர பதிவு செய்து மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக வட்டாட்சியர் ராஜசேகர் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில். அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோழம்பேடு பகுதியை சேர்ந்த பினு (41) ஆகிய இருவரையும் போலி ஆவணங்களை தயார் செய்யும் போது கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று ஆள்மாறட்டம், மோசடி, போலி முத்திரை, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுவரை யார் யாருக்கெல்லாம் எந்தெந்த அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்தார்கள் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambattur SI, Cheating, Chennai, Crime News, Local News