திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய "பாதை மாறா பயணம்" நூல் வெளியிட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அப்போது டி. ஆர்.பாலுவிடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மன்னிப்பு கோரிய நிகழ்வு பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், 'டி.ஆர்.பாலு மனதில் பட்டதை படபடவென பேசக்கூடியவர். ஒருமுறை கருணாநிதி ஏதோ ஒரு விஷயத்தை பேசும்போது டி.ஆர்.பாலு குறுக்கிட்டு சில கருத்துகளை தெரிவித்தார். நானும் அருகே இருந்தேன். உடனே கருணாநிதி கோபமடைந்து, 'நீ தலைவனா, நான் தலைவனா...எது சரி என எனக்கே சொல்லித்தர்றியா... போடா..'என்று விரட்டினார்.உடனே டி.ஆர்.பாலு வெளியே சென்றுவிட்டார்.
சில நிமிடங்களிலேயே கருணாநிதி என்னை அழைத்து, 'எப்பா.... நல்லா யோசிச்சு பார்த்துட்டேன்.அவன் (டி.ஆர்.பாலு) சொல்றது சரிதாம்பா.. அவனை கூப்பிட்டு வா' என கூறினார். நானும் டி.ஆர்.பாலுவை சமாதானம் செய்து அழைத்துவந்தேன். அப்போது டி.ஆர்.பாலுவிடம், 'பாலு...நீ சொன்னது தாம்பா சரி.. நான்தான் அவசரப்பட்டுட்டேன்.. என்னை மன்னிச்சுடு பாலு' என்று கருணாநிதியே மன்னிப்பு கேட்டார். அதைக் கேட்டதும் பாலுவும் அழுதுவிட்டார்' என்றார். இதனைக் கேட்டு கண் கலங்கி அழுதார் டி.ஆர்.பாலு.
மேலும் விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மத்திய அரசும், நீதித்துறையும் ஒத்துழைத்திருந்தால் இலங்கைக்கு பாலம் அமைத்திருப்போம் என்றார். விரைவில் அதற்கான சூழல் ஏற்பட்டு நிச்சயம் பாலம் கட்டப்படும் எனவும், அதை ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK Karunanidhi, Duraimurugan