முகப்பு /செய்தி /சென்னை / தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை கிடுகிடு உயர்வு

அரிசி

அரிசி

தமிழகத்தில் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டதாலும் நெல் கொள்முதல் விலை உயர்வாலும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதாலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழகத்தில் நெல் தட்டுப்பாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிப்பால் ஒரே மாதத்தில் அரிசி விலை 26 கிலோ மூட்டைக்கு 150 முதல் 300 வரை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டதாலும் நெல் கொள்முதல் விலை உயர்வாலும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டதாலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள அனைத்து வகையான அரிசியின் விலையானது 26 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு  அரிசியின் வகை மற்றும் அதன் தரத்திற்கு ஏற்ப விலையானது கடந்த 1 மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட 1 மூட்டை அரிசியின் பழைய மற்றும் புதிய விலை நிலவரம் 07.09.22 நிலவரப்படி.

1.₹900 ரூபாய்க்கு விற்ற பொன்னி அரிசி -₹300 உயர்ந்து - ₹1200 - க்கு விற்பனை.

2.-₹980 ரூபாய்க்கு விற்ற புல்லட் அரிசி-₹200 உயர்ந்து ₹- ₹1200 க்கு விற்பனை.

3.-₹1050 ரூபாய்க்கு விற்ற பொன்னி பச்சை அரிசி -₹200 உயர்ந்து - ₹1250க்கு விற்பனை.

4.-₹690 ரூபாய்க்கு விற்ற இட்லி அரிசி-₹160 உயர்ந்து -₹850 க்கு விற்பனை.

5.-₹2200 ரூபாய்க்கு விற்ற பாசுமது அரிசி  -₹300 உயர்ந்து-₹2500 க்கு விற்பனை.

Also Read : தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

இதுகுறித்து கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி கடை உரிமையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கு தமிழக அரிசி வகைகள் ஏற்றுமதியானது அதிகரித்து வருவதாகவும். உடனடியாக மத்திய மாநில அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இதே நிலை நீடித்தால் தமிழகம் மற்றும் சென்னையில் அரிசியின் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாட உணவிற்கு 1 கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி அன்றாடம் வாங்கி சமைக்கும் ஏழை எளிய சாமானிய மக்கள் பெரியளவில் மிககடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கோயம்பேடு உணவு தானிய அரிசி மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

top videos

    அம்பத்தூர் செய்தியாளர் : கன்னியப்பன்

    First published:

    Tags: Koyambedu Market, Price hike, Rice