சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம், அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களாக மாமியார் செண்பகத்தை காணவில்லை என்று சுரேஷின் மனைவி, சுரேஷின் அண்ணனிடம் கூறியுள்ளார். பின்னர் சுரேஷின் அண்ணன் வீட்டிற்கு சென்று சுரேஷிடம் தாய் குறித்து கேட்டுள்ளார். அதற்கு வயதான தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை அடக்கம் செய்ய பணம் இல்லை என்பதால் அவரை வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடி அடக்கம் செய்து விட்டதாக கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ட்ரமில் மூடப்பட்டிருந்த 86 வயதான மூதாட்டியின் உடலை மீட்க முடியாததால் ட்ரம் உடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Must Read : திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அடையாற்றில் 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை
இந்நிலையில், 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.