சென்னையில் 17.02.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கோவிலம்பாக்கம், மணலி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அதனடடி,கோவிலம்பாக்கம் பகுதி : துரைபாக்கம் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, திருவின் நகர், பூபதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மணலி பகுதி : கலைஞர் நகர், சி.பி.சி.எல்.நகர், 200 அடி ரோடு, பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.எ பேஸ் 1 & 2, சாத்தாங்காடு ஸ்டீல்யார்டு, கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், சொக்கம்மாள்புரம், எ.சி.சி. மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் விரைவில் முடிவடைந்தால் உடனே மின் விநியோகம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai power cut, Powercut, TANGEDCO