முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள் மந்தமாக தான் நடைபெறுகிறது - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள் மந்தமாக தான் நடைபெறுகிறது - அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

கே.என்.நேரு

தமிழ்நாட்டில் மொத்தம், 576 சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் இதுவரை, 276 சாலைப் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டன. மீதமுள்ள  சாலைப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் நடைபெறும் பணிகள் சற்று மந்தமாக இருக்கின்றன என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சி முக்கொம்பு  மேலணைக்கு  தற்போது நீர்வரத்து வினாடிக்கு, 1,95,000 கன அடியாக உள்ளது. இதில், காவிரி ஆற்றில் வினாடிக்கு, 62, 000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு, 1,33,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

எனவே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், பொதுமக்கள் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய நபரை எவ்வாறு மீட்பது குறித்த ஒத்திகை செய்து காட்டினர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து நடத்திய ஒத்திகையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் வாசிக்க: மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு.. இன்று விசாரணை

அதனை தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேரு, செய்தியாளர்களிடம் கூறியபோது, சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ. 937 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் மின்கம்பங்கள், சாலைக்கு அடியில் குடிநீர் குழாய்கள், மின்சார வயர்கள் செல்வதால் பணிகள் சற்று மந்தமாக செல்கிறது.

இப்பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார். சாலை பணிகள் மந்தமாக இருந்தாலும் கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு மழை பெய்தாலும் பெரிதளவு பாதிப்பு இருக்காது என உறுதியளித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் மொத்தம், 576 சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் இதுவரை, 276 சாலைப் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டன. மீதமுள்ள  சாலைப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

First published:

Tags: Chennai, Monsoon rain, Trichy