டாஸ்மாக் கடைகளில் அரசு அறிவித்த நேரத்தை தாண்டி மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடித்து போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பிளாக்கில் மதுபானங்களை விற்பனை செய்த 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் அரசு விதிமுறைகளின் படி டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறன. டாஸ்மாக்கில் மது விற்பனை நேரம் மத்தியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில இடங்களில் விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட நேரங்களைத் தாண்டி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள், பார்களில் இரவு 10க்கு மேல் பின்பக்கம் வழியாக கள்ளச் சந்தையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள டாஸ்மாக் மற்றும் பார்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது நள்ளிரவு, அதிகாலை என நீடித்தது. இந்த சோதனையின் போது கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த புகாரில் 41 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து 581 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: எல்லை மீறும் மதுரை ஆதினம்.. ஜெயலலிதா காலத்தில் ஜெயேந்திரருக்கு நடந்த கதி என்ன தெரியுமா... எச்சரிக்கும் 'திமுக' முரசொலி
இந்த குற்றச் சம்பவத்தில் பார் உரிமையாளர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது என பரவலாக கூறப்படும் நிலையில், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சட்ட விரோதமான முறையில் மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.