முகப்பு /செய்தி /சென்னை / காதலியிடம் மோசடி செய்து சிக்கிய இளைஞர்... திருமணம் நின்றதால் விரக்தியில் விபரீத முடிவு

காதலியிடம் மோசடி செய்து சிக்கிய இளைஞர்... திருமணம் நின்றதால் விரக்தியில் விபரீத முடிவு

தற்கொலை செய்த இளைஞர்

தற்கொலை செய்த இளைஞர்

Poonamalle dead body found | திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த காதலன் அவரது உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Poonamallee, India

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா என்ற பெண்  நிஷாந்த் என்ற வாலிபர் தன்னை கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து ரூ. 68 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் அளிதார். நிஷாந்த் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து காவல்துறையினர் நிஷாந்த், அவரது தந்தை, தாய் ஆகிய மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிஷாந்திற்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் கடந்த 3ஆம் தேதி நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.

கடந்த 4 தினங்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்த் சென்னை போருர் ஏரியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்த நிலையில் போருர் ஏரி அருகே நிஷாந்தின் கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நிஷாந்த் போரூர் ஏரியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள காவல்துறையினர் அவரது உடலை ஏரியில் தேடி வந்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : சோமசுந்தரம், பூந்தமல்லி.

First published:

Tags: Chennai, Dead body, Lovers, Suicide