பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட கட்டண சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று இரவு 9 மணிமுதல் சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 12-ம் தேதி தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இரவு 9 மணிக்கும் , ஜனவரி 13-ம் தேதி நெல்லையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 1 மணிக்கும், இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கும் , மறுமார்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் என சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் துவங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்று தீர்ந்தது. இதேபோல் தட்கள் முன்பதிவு நேற்றைய தினம் துவங்கிய நிலையில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன. இந்நிலையில் சிறப்பு ரயில் இயக்கமானது இன்று துவங்க உள்ளது.
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய முதல் சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட இருக்கிறது , அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரக்கூடிய மற்றொரு சிறப்பு ரயில் இன்று இரவு 11:15 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயின் சார்பில் ஐந்து சிறப்புகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழலில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Pongal 2023, Pongal festival, Special trains