சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக் கத்திகளை நடைமேடையில் உரசியபடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற வீடியோ கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அருள் மற்றும் இரு மாணவர்கள் சிக்கினர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் அருள் உட்பட 3 பேரையும் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
We would like to inform you that the 3 youths seen in this viral video performing stunts with sharp weapons in their hand, have been arrested by @grpchennai! They are Anbarasu and Ravichandran from Gummidipoondi and Arul from Ponneri. They are all students of Presidency College. pic.twitter.com/3FQVpTWeoW
— DRM Chennai (@DrmChennai) October 11, 2022
சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி உமா செய்தியாளர்களிடம் கூறுகையில், முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளோம், மீதமுள்ள நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
Also Read : செல்வம் கொட்டும்... மந்திரவாதி பேச்சை கேட்டு 2 பெண்களை கழுத்தறுத்து நரபலி கொடுத்த கேரள தம்பதி
ரயில்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் குற்றச் செயல் புரிவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்ததார். ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எஸ்.பி உமா எச்சரித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News