சென்னையை அடுத்த பல்லாவரம் துரைக்கண்ணு சாலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வியாசர்பாடியை சேர்ந்த வாலிபருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இன்று இவர்களின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று மாலை இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டு பின்புறத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்த மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை பல இடங்களில் தேடினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பெண் கிடைக்காததால் இது குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.
அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் மணப்பெண்ணுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த திருமணம் பிடிக்காமல் அவருடன் சென்றாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதனால் இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Local News, Pallavaram