குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை எல்லாம் ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள் என சமக தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
அதில் பேசிய அவர், "நான் விளம்பரத்தில் நடித்தபோது ஆன்லைன் ரம்மிக்கு தடைச் சட்டம் இல்லை. அதற்கு பிறகு தான் அவசர சட்டம் பிறப்பித்தார்கள். ஒருவேளை அவசரச் சட்டம் அதற்கு முன்பாக பிறப்பித்து இருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் வகுப்பது அரசின் வேலை. அமைச்சர் ரகுபதியிடம் அவசர சட்டம் கொண்டுவர வேண்டுமென நான் வலியுறுத்தி உள்ளேன். ஆன்லைனில் ரம்மி மட்டுமல்ல ஆன்லைனில் பல விசயம் இருக்கிறது. நான் மட்டுமா நடிக்கிறேன். தோனி, ஷாருக்கான் கூட நடிக்கிறார்கள்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என் கிரெடிட் கார்டில் ரூ. 10 லட்சம் லிமிட் உள்ளது. எனவே அதற்கு மேல் உள்ள் தொகைக்கு என்னால் விளையாட முடியாது. அதுபோலதான் அனைவருக்கும்” என தெரிவித்தார்.
மேலும் “குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள். உண்மையில் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. அதற்கு திறமை அவசியம்" என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor sarath kumar, Online rummy