முகப்பு /செய்தி /சென்னை / 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் கைது..

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் கைது..

கைதானவர்

கைதானவர்

Crime News : பல்லாவரம் அருகே 4 வயது சிறுமிக்கு ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி திடீர் நகர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் பம்மல் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக அவர்களது 4 வயது மகளை அருகில் உள்ள உறவினரிடம் விட்டுச்சென்றுள்ளனர். மாலை வேலை முடித்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். 

அப்போது உறவினரும், விட்டுச்சென்ற சிறுமியையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது சிறுமி மயக்க நிலையில் வீட்டின் அருகே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது அவர்களின் உறவினரான ஜாஸ் மொய்தீன்(28), என்பவர் 4 வயது சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு சிறுமியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த  ஜாஸ் மொய்தீனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் தாம்பரம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News, Local News