கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ஜிப்சி மக்கள் ... அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை...
கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ஜிப்சி மக்கள் ... அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை...
ஜிப்ஸி
சென்னை, கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ஜிப்சி மக்கள் அப்பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில் ஜிப்சி மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். நரிக்குறவர் காலனியில் சுமார் 148 குடும்பம் 75 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஆண், பெண் என இருபாலருக்கும் பொது கழிப்பிடம் உள்ளது.
ஆனால், கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் அங்கு வசிக்கும் பெண்கள், ஒன்றை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள பொதுக்கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். பாதள சாக்கடை அடைப்புகளை முறையாக சுத்தம் செய்யாததால் மழைகாலத்தில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மெட்ரோ குடிநீர் நிரந்தரமாக கிடைக்க இப்பகுதியில் டேங்க் வைக்க வேண்டும் எனவும், அதேபோல் அரசின் சலுகைகள் கிடைக்க, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களை எம்.பி.சி பட்டியலில் இருந்து எஸ்.டி பட்டியலுக்கு மாற்றித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நரிக்குறவர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.