பொங்கல் அன்று நடைபெறும் எஸ்.பி.ஐ தேர்வை ஒத்திவைக்கக் கோரி நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி பொதுமேலாளர் அறையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.
எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் முதன்மை தேர்வுக்கான தேதி தமிழர் திருநாள் பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர்கள் தேதி எழுவதில் அவதியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வு மாநில அரசு விடுமுறையைக் கணக்கில் கொள்ளலாம் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வு தேதியை மாற்றியமைக்கத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி எதிரே மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் இன்று காலை போராட்டம் மேற்கொண்டார்.
Also Read : முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு : சகோதரர் கௌசே ஆதாம்பாஷா பரபரப்பு வாக்குமூலம்!
அதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தை நடத்த வங்கி ஊழியர்கள் அழைத்த நிலையில், உயரதிகாரிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்காததால் சு.வெங்கடேசன் வங்கி பொதுமேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Exam, SBI Bank, Su venkatesan