முகப்பு /செய்தி /சென்னை / திசைமாறிய பேருந்து.. திடீர் பிரேக்கால் சறுக்கிய பைக்... மகன் கண்முன்னே தாய் உயிரிழப்பு!

திசைமாறிய பேருந்து.. திடீர் பிரேக்கால் சறுக்கிய பைக்... மகன் கண்முன்னே தாய் உயிரிழப்பு!

சாலை விபத்து

சாலை விபத்து

Road Accident | சென்னை அருகே மகன் கண்முன்னே தாய் மீது அரசு பேருந்து ஏறி இறங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் வீரபாண்டியன் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் 45-வயதான சுஜாஜினி. இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக தனது 20 வயது மகனுடன்  ஸ்கூட்டரில் ஒட்டியம்பாக்கத்திலிருந்து அரசங்கழனியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒட்டியம்பாக்கம் பிரதான சாலையில் எதிர் திசையில் சைதாப்பேட்டையில் இருந்து காரணை செல்லும் தடம் எண் 51B அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து ஓட்டுனர் டேவிட் கவனக்குறைவால் பேருந்து திடீரென வலது பக்கம் சென்றுள்ளது. அதை பார்த்த சுஜாஜினி மகன் திடீரென பிரேக் பிடித்ததால் சாலை ஓரம் இருந்த மண் சறுக்கி வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அதில் சுஜாஜினி தலை மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் இரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே தாய் சுஜாஜினி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜாஜினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also see... அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

மேலும் இந்த விஅபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஜோதிநகரை சேர்ந்த ஓட்டுனர் டேவிட்டிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் கண்முன்னே தாய் அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

top videos

    செய்தியாளர்: இசிஆர் ப.வினோத்கண்ணன்

    First published:

    Tags: Chennai, Mother, Road accident