ஒருவருக்கு ஒருமுறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளதாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் தினசரி 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு ஆளாவதாக கூறினார். குறிப்பாக சென்னையில் தினமும் 10 முதல் 100 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ், “ஒருவருக்கு ஒருமுறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவுதான்” என கூறினார்.
இதையும் படிங்க : மழை காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ - வந்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்நிலையில், 5 முதல் 10 சதவீதம் மக்களுக்கு 2வது முறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண் அறுவை சிகிச்சை நிபுணர் கவுசிக் தெரிவித்தார். மேலும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்த சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் மக்கள் அனைவரும் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.