முகப்பு /செய்தி /சென்னை / நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மாணவி.. பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு!

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மாணவி.. பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு!

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால்  இங்கு வந்துள்ளேன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் - ஷாலினி ஷர்மா மனு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்.

என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்தார். ஏற்கனவே எனது 10 வயது சகோதரனையும் மேலும் இரண்டு பேரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை. நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன்.  வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு  அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Chennai High court, Madhya pradesh, Narabali