18-59 வயதினருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, நாடு முழுவதும் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் எழும்பூர் குடும்ப நல துறை பயிற்சி மையத்தில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதுவரை அரசு மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே போஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் ரூபாய் 386 கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டி இருந்தது.
தமிழ்நாட்டில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்களில் 23 சதவீதம் பேரும் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் செலுத்திக்கொள்ள தகுதியான நபர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களுமே தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், எழும்பூரில் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் 30 லட்சம் தடுப்பு ஊசி காலாவதி ஆகிவிடும் என்பதையும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் மத்திய அரசிடம் தமிழக அரசு எடுத்துக் கூறியது.
இந்நிலையில், மத்திய அரசு இலவச போஸ்டர் டோஸ்க்கு அனுமதி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் 3. 45 கோடி பேர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளத் தகுதியானவர்கள் உள்ளனர் என்றார்.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பூஸ்டர் டோஸ் எடுக்க தகுதியானவர்கள், முதல் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள், மற்றும் இரண்டாம் தவணை உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளாதவர்கள் என 4. 77 கோடி பேர் தமிழகத்தில் உள்ளனர். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க மாதம் ஒருமுறை நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம்கள் இனி இரண்டு முறை நடைபெறும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், கேரளாவில் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். விமான நிலையத்தில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளேன் என்றார்.
Must Read : ஓபிஎஸ் மனம் திருந்தி எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தால் அவரை மீண்டும் ஏற்போம் - செல்லூர் ராஜு
முதல்வரின் உடல் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், தமிழக முதலமைச்சர் நல்ல உடல் நிலையில் உள்ளார் என்றும், விரைவில் வீடு திரும்பி விடுவார் என்றும், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்து விடுவார் எனவும் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.