முகப்பு /செய்தி /சென்னை / சிறுவனை கருணை கொலை செய்ய சொன்ன தாய்... அரசு மருத்துவர்களின் சீறிய முயற்சியால் நலம்!

சிறுவனை கருணை கொலை செய்ய சொன்ன தாய்... அரசு மருத்துவர்களின் சீறிய முயற்சியால் நலம்!

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

கடந்த ஓராண்டில் 6 முறை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கிருமிநாசினியால் தீ விபத்துக்கு ஆளான மகனை கருணை கொலை செய்வதற்கு அவரது தாயார் மனு அளித்த நிலையில், அரசு மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சூர்யகுமார், கடந்த 2021 ஆம் ஆண்டு கிருமிநாசினி மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்தார். சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. நாளடைவில் ரத்த கொதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய் பாதிப்புக்கு ஆளானார். இதனால் மனம் நொந்து போன அவனது தாயார் சத்யஜோதி, சிறுவனை கருணை கொலை செய்திடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த விவகாரம் அமைச்சரின் கவனத்திற்கு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சட்டமன்ற விடுதியில் சிறுவனின் பெற்றோர் தங்கி அவரை பராமரித்து வந்தனர். கடந்த ஓராண்டில் 6 முறை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவர்களின் சீரிய முயற்சியால் தற்போது அந்த சிறுவன் நலமுடன் உள்ளார். சிறுவன் குணமடைய உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். அரசு மருத்துவர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டதாக குணமடைந்த சிறுவன் சூர்யகுமார் தெரிவித்தார்.

First published:

Tags: Ma subramanian, Rajiv gandhi Hospital