அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் நாள் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதாவின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற நம் எம்ஜிஆர் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைக்கும் கோடானு கோடி தமிழ்நாடு மக்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் நம் ஜெயலலிதா. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெண்ணினத்தின் அடையாளமாக விளங்கிய ஜெயலலிதா பிறந்த இந்நன்னாளில், நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, சிறப்புடன் கொண்டாடுவோம் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Jayalalitha, Sasikala