சென்னையில் சுற்றுலா தலங்களில் முதன்மையாக விளங்குவது மெரினா கடற்கரை. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் போது மக்களிடம் செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறி வருகிறது.
இத்தகைய குற்ற சம்பவங்களில், மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டி வரும் சில நபர்கள் ஈடுபடுவதும், போலீசார் அவர்களை கைது செய்தும் தொடர்கதையாகி வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்த நபர்களில் சிலர் கடற்கரையை விடுத்து திருவல்லிக்கேணி, மெரினா, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டும் வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை தடுக்கும் வகையில், குதிரை ஓட்டும் நபர்களை தனியாக அடையாளம் காண்பதற்காக, மெரினா காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் குதிரை ஓட்டும் 20 நபர்களுக்கு அடையாள எண் கொண்ட சீருடை, ஐ.டி கார்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
Must Read : தன்னை கடித்த விஷப் பாம்புடன் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பாம்புபிடி வீரர்..
மேலும், பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு மெரினா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மெரினா கடற்கரையில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மெரினா போலீசார் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு நடவடிக்கையை காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Horse riding, Marina Beach