முகப்பு /செய்தி /சென்னை / அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி - சென்னையில் துயர சம்பவம்

அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி - சென்னையில் துயர சம்பவம்

உயிரிழந்த பிரியங்கா

உயிரிழந்த பிரியங்கா

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பிரியங்கா நேற்று இரவு அண்ணனுடன் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலியானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா(22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றோரு இருசக்கர வாகனம் உரசியதில் பின்னால் அமரந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் இவர் படுகாயமடைந்தார்.

இதில் பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போக்குவரத்து போலீஸார் பதிவு எண் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர்.

First published:

Tags: Accident, Bike, Chennai