சென்னையில் மரம் விழுந்து, வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட மண் சரிவால் அருகிலிருந்த பெரிய மரம் ஒன்று கீழே விழுந்தது. இதில், அந்த வழியாக வந்த கார் சிக்கிக் கொண்டது. காரில் பயணம் செய்த போரூர் மங்கலம் நகரைச் சேர்ந்த வாணி கபிலன் உயிரிழந்தார்.
வாணி, நேற்று மாலை அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையையொட்டி இருந்த மரம் இவர்கள் வந்த காரின் மீது மரம் விழுந்தது. இதில், வாணி உடல் நசுங்கி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக்கும், வாணியின் தங்கை எழிலரசியும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மழைநீர் வடிகால் பணிகளுக்கும், மரம் விழுந்து ஏற்பட்ட விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், இந்த விபத்து இயற்கையானது என குறிப்பிட்டார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.