பாலசுந்தரம் என்பவர் பழங்குடியின வகுப்புக்கான சான்றிதழ் வழங்கி கோவை வன மரபியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். 1999ஆம் ஆண்டு இளநிலை எழுத்தாளராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சாதிச் சான்றிதழ் மாநில அளவிலான குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அதில் போலி என்பது தெரிய வந்ததையடுத்து, பாலசுந்தரத்தின் சாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதி சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது ஏற்புடையதல்ல என்று மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது பெருமைக்குரிய ஒன்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனக் கூறி, அவரது சாதிச்சான்று ரத்து செய்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai High court, Reservation