முகப்பு /செய்தி /சென்னை / ஆ.ராசா பேசியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா? மக்கள் கேள்வி என இபிஎஸ் விமர்சனம்

ஆ.ராசா பேசியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா? மக்கள் கேள்வி என இபிஎஸ் விமர்சனம்

இபிஎஸ், ஆ.ராசா

இபிஎஸ், ஆ.ராசா

ஆ. ராசா சொன்ன வார்த்தை, ஸ்டாலின் குடும்பத்திற்கு பொருந்துமா என கேள்வி எழுப்பிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஹிந்துக்கள் குறித்த ஆ.ராசாவின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அதில் 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சி அதிமுக தான் எனவும் கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும் அதனால் அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழ்நாட்டில் அதிகமான கல்லூரிகளை திறந்தவர் எம்.ஜி.ஆர் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா கல்விக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் செய்த புரட்சியின் காரணமாக தமிழ்நாடு கல்வித்துறையில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை அடைந்தது என தெரிவித்தார். மேலும் தான் முதலமைச்சராக இருந்த போது 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும் திமுக அரசு பதவியேற்று 15 மாதம் ஆகியும் ஒரு கல்லூரியையும் கொண்டு வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவிக்கும் போது அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரிலேயே அண்ணா திமுக என்று பெயர் வைத்தார் எனவும் அண்ணா பெயரில் இயங்கு வரும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும் கூறினார்.

இதையும் வாசிக்க: சாதிய வன்முறைக்கு காரணம் மனு தர்மம் தான்.. ஆ.ராசாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

அதேபோல் நாள் தோறும் 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தவர் எம்.ஜி.ஆர் அதனை தொடர்ந்து மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். அம்மா உணவக்கத்தை தற்போதைய அரசு மூட நினைத்தால் அதற்கான பதிலடியை மக்கள் தேர்தலில் கொடுப்பார்கள் எனவும் மக்கள் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.

மாணவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க அதிமுக ஆட்சியில் மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அறிவுப்பூர்வமான கல்வி கிடைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்து உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

ஆ. ராசா சொன்ன வார்த்தை, ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என மக்கள் கேட்கின்றனர் என கேள்வி எழுப்பிய அவர் ஹிந்துக்கள் குறித்த ஆ.ராசாவின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்தார்.

First published:

Tags: A Raja, ADMK, CM MK Stalin, EPS