சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பர்களுக்கு, அங்கு செயல்பட்டு வரும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை விதிக்கிறது. இதில் குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால், இறந்தவரின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க குடியிருப்போர் நலச் சங்கங்கள் அனுமதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் மகன், மகள் அல்லது உறவினர்கள் வரும் வரை உடலை வைத்திருந்து, அனைவரும் வந்த பின்னர் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வார்கள். சில நேரங்களில் 24 மணி நேரத்திற்கு மேல் கூட உடலை வீட்டில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் நீண்ட நேரம் உடலை வீட்டில் வைத்திருக்க அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, ஒரே நேரத்தில் 8 முதல் 10 உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பிணவறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Local News