மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே நேற்று முன் தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், சென்னை நகரில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அதேபோல் 200க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்தன.
காற்றின் சீற்றம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 200க்கும் மேற்பட்ட சாலைகள், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்தன. சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைமையை சீரமைக்க களப்பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : மாண்டஸ் புயல் நிவாரணம் எப்போது கிடைக்கும்? அமைச்சர் கொடுத்த அப்டேட்!
முதற்கட்ட மதிப்பீடுகளின் படி சென்னையில் 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், முழுமையான சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் சேதம்
அதேபோல புயல் மழை மற்றும் சூறைக்காற்றால் கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் சேதமடைந்தன. அத்துடன், அண்ணாநகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வழிகாட்டி பலகைகளும், இதர பொருட்களும் சேதமடைந்தன.
அத்துடன், கோயம்பேடு பணிமனை, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தத்தில் மரங்கள் விழுந்தும், குழாய் உடைப்பும் ஏற்பட்டது. இதனால், 3 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டதாக தற்காலிக சேத மதிப்பீடு செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Cyclone Mandous