சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்தது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 10 மணி அளவில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
இதையும் படிக்க : கரையைக் கடந்தது மாண்டஸ்.. முறிந்த மரங்கள்.. சாய்ந்த மின் கம்பங்கள்.. முழு விவரம் இங்கே!
மாமல்லபுரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த போது, மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் மையப்பகுதி அதிகாலை 3 மணியளவில் கரையை முழுவதுமாக கடக்கும் வரை அதி கனமழையும் சூறைக்காற்றும் நீடித்தது.
மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் காற்றால் பெயர்ந்து விழுந்தன. இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று ஒருநாள் மட்டும் சைக்கிளிங் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Cycling, Cyclone Mandous