சென்னை கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கொட்டிவாக்கம் மீனவ கிராமத்துக்கு சென்ற முதலமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். சேதம் அடைந்த படகுகளின் விவரங்கள் குறித்து மீனவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்ட்-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/JGV4SRfHxx
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 10, 2022
பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ள நிலையில், அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து பாலவாக்கம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றார். 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், 300 இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேவையெனில் மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai rains, CM MK Stalin, Cyclone Mandous