சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட பயணி தாக்கியதில், பேருந்து நடத்துனர் உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, நடத்துனருக்கும் , பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட பயணி மதுபோதையில் இருந்துள்ளார். சண்டையில் பயணி தாக்கியதில் காயம் அடைந்த நடத்துனர் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த நடத்துனர் பெருமாள், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 54.
இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Kallakurichi, Tasmac