முகப்பு /செய்தி /சென்னை / பரிகாரம் செய்வதாக சிறுமியிடம் சில்மிஷம் செய்த மன்மத பூசாரி - போக்சோ சட்டத்தில் கைது

பரிகாரம் செய்வதாக சிறுமியிடம் சில்மிஷம் செய்த மன்மத பூசாரி - போக்சோ சட்டத்தில் கைது

பூசாரி கைது

பூசாரி கைது

சென்னையை அடுத்த மதுரவாயலில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்த சாமியார், தனது அடையாளத்தை மறைக்க மொட்டையடித்து தலைமறைவாக இருந்தது அம்பலம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அடுத்த மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும், சிறப்பு  பரிகாரம் செய்ய  வேண்டும் என்றும் மதுரவாயல் கந்தசாமி நகர் 4 வது தெரு பகுதியைச்  சேர்ந்த கெங்கையம்மன் கோவில் பூசாரி சந்திரசேகர்(55),  சிறுமி  பெற்றோர் அனுமதியுடன் பூசாரி வீட்டில் கடந்த 5 தேதி தங்கி உள்ளார்.

அப்போது பூசாரி குறித்து சிறுமியின் தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர், பூசாரி சந்திரசேகர் பெண்கள் விஷயத்தில் தவறாக நடப்பவர் என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் கந்தசாமி நகரில் உள்ள பூசாரி வீட்டிற்கு அன்று இரவே வந்துள்ளனர்.

அப்போது வீட்டினுள் பூசாரியுடன் இருந்த  சிறுமியை அழைத்து பேட் டச் குறித்து எடுத்து சொல்லி இதுபோல் பூசாரி செய்தாரா என கேட்டுள்ளனர் அதற்கு சிறுமி ஆமாம் என கூறவே, சிறுமியிடம் தவறாக நடந்த பூசாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில், காயமடைந்த பூசாரியை தனியார் மருத்துவமனையில அக்கம் பக்கத்தினர் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  பூசாரியைய் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரித்ததில் பூசாரி தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் மீது மதுரவாயல் மகளிர் போலீசார்  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த சாமியார் போலீஸ் காவலில் இருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். அவரை கடந்த 5 நாட்களாக தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.

Must Read : மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு.. கதறி அழுத போலீஸ் -வைரலான வீடியோ

இந்நிலையில் பூசாரி மதுரவாயல் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார், போக்சோ வழக்கு பதியப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பி குடுமியுடன் வலம் வந்த மன்மத பூசாரி, திடீரென தனது அடையாளத்தை மாற்றி மொட்டை தலையுடன் கோவில் கோவிலாக தலைமறைவாக இருந்து தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - சோமசுந்தரம்.

First published:

Tags: Chennai, Crime News, Sexual harassment