சென்னையில், மெரினா முதல் பெசன்ட் நகர் இடையே கடற்கரையோரமாக ரோப் கார் திட்டத்தின் சாத்தியக் கூறு ஆய்வுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வர மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் இருந்து, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் வழியே பெசன்ட் நகர் கடற்கரை வரை 4.6 கிலோமீட்டர் தூரம் ரோப் கார் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெற்ற 24 மாதங்களில் சாத்தியக்கூறு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புவிசார் தொழிநுட்பம் உள்ளடக்கிய பல்வேறு ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beach, Chennai, Marina Beach