முகப்பு /செய்தி /சென்னை / மேலும் ஒரு மாணவர் தற்கொலை- சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் விளக்கம்

மேலும் ஒரு மாணவர் தற்கொலை- சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் விளக்கம்

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாக இருந்துவருகிறது. சென்னை ஐ.ஐ.டியிலும் கடந்த சில வருடங்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்துவருகிறது.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாகவும் இருந்துவருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார். அதேநேரத்தில் மற்றொரு மாணவரும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக தற்போது சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பி டெக் படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 இந்த நிலையில், மாணவர் புஷ்பக்கின் மரணம் வருத்தமளிப்பதாக ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடிவதில்லை என ஐஐடி விளக்கமளித்துள்ளது.

First published:

Tags: Chennai IIT