அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்து, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவற்றை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்தார். வழக்கை நீதிமன்றம் விசாரித்த போது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகுதான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, EPS, V K Sasikala