முகப்பு /செய்தி /சென்னை / திருடு போன ஆடுகள்... ஒரு வருடமாக அலைந்து, தானே திருடனை பிடித்த வழக்கறிஞர்!

திருடு போன ஆடுகள்... ஒரு வருடமாக அலைந்து, தானே திருடனை பிடித்த வழக்கறிஞர்!

ஆடு கொள்ளையனை பிடித்த வழக்கறிஞர்

ஆடு கொள்ளையனை பிடித்த வழக்கறிஞர்

Chennai Goat theft | தன் வீட்டில் உள்ள ஆடுகளை திருடிய நபரை ஒரு வருடமாக தேடி அலைந்து கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் வழக்கறிஞர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் இரவு நேரங்களில் தனது ஆடுகளை திருடி சென்ற நபரை ஒரு வருடமாக தேடி கண்டுபிடித்து வழக்கறிஞர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சென்னை அயனாவரம் கேகே நகர் 8-வது தெருவில் வழக்கறிஞர் ஸ்ரீதர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவரது வீட்டிலிருந்து ஒரு ஆடு காணாமல் போயுள்ளது. சில தினங்களில் மீண்டும் ஒரு ஆடு காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.

அதற்கு அடுத்த மாதம் மீண்டும் அவரது வீட்டில் இருந்து இரண்டு ஆடுகள் காணாமல் போனதால், சிசிடிவி காட்சியை ஆய்வு  செய்துள்ளார். அப்போது அதிகாலை வேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து மர்ம நபரை கைது செய்ய சொல்லி அயனாவரம் காவல் நிலையத்தில் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் தாமதமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் ஸ்ரீதரே குற்றவாளியை பிடிக்க நேரடியாக களத்தில் இறங்கினார்.

கடந்த ஒரு வருடமாக மர்ம நபரை தேடி அலைந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கீழ்பாக்கம் மருத்துவமனை வழக்கறிஞர் சென்றபோது, அங்கு ஆடு திருடனும் தற்செயலாக வந்துள்ளார். பின்னர், காத்திருந்து ஆடு திருடனை கொரட்டூர் வரை ஃபாலோ செய்து அவர் வேலை செய்யும் முகவரியை கண்டறிந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கொரட்டூர் பகுதியில் வைத்து வழக்கறிஞர் ஸ்ரீதர், ஆடு திருடனை கையும் களவுமாக பிடித்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

போலீசார் விசாரணையில் ஆடு திருடன் ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த அக்பர் (37) என்பது தெரியவந்தது.

போலீசார் தொடர் விசாரணையில் கடந்த 2015 ம் ஆண்டிலிருந்தே பல இடங்களில் ஆட்டுப்பண்ணை மற்றும் ஆடு வளர்க்கும் வீடுகளில் புகுந்து அதிகாலை நேரத்தில் ஆடுகளை தேடி வந்ததை அக்பர் வழக்கமாக கொண்டு வந்துள்ளார். மேலும், ஆடுகளை திருடி கொரட்டூர் பகுதியில் தான் பணிபுரிந்து வந்த  மட்டன் கடை உள்ளிட்ட பல கடைகளில் விற்பனைக்கு வந்த ஆடு எனக்கூறி அதிக விலைக்கு விற்று வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நடப்பு ஆண்டில் 25 க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அக்பர் இதுவரை எவ்வளவு ஆடுகள் திருடியுள்ளார். எங்கெங்கு திருடியுள்ளார். இந்த ஆடு திருட்டில் யார் யார்க்கெல்லாம் தொடர்பு உள்ளது என  அயனாவரம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஸ்ரீதர், தொடர்ச்சியாக ஆடுகள் திருடு போனதாக சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் தானே முயற்சி எடுத்து பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai, Local News, Theft