சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யா. ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்யா கல்லூரி செல்வதற்காக தனது தோழிகளுடன் மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர் சத்யாவை ரயிலில் தள்ளி படுகொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தலைமறைவான சதீஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சதீஷை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சத்யா படுகொலை செய்யப்பட்ட துக்கத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாக கூறப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
Also Read: கல்லூரி மாணவி கொலை.. காட்டிகொடுத்த தொப்பி - இளைஞர் சிக்கியது எப்படி
இந்நிலையில் இன்று காலை சத்யா மற்றும் அவரின் தந்தை மாணிக்கம் ஆகியோரின் உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதில் தற்கொலை செய்துகொண்ட சத்யாவின் தந்தை மாணிக்கம் மதுவுடன் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Tamil News