முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரினாவில் தொழிலதிபரைக் கடத்தி நிலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை 124ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்து விட்டதாகக் கூறி, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்த போது, அதன் ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்தது.
இதனையடுத்து போலி ஆவணங்களைச் சமர்பித்ததாகக் கூறி திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, DMK