முகப்பு /செய்தி /சென்னை / ரூ.300 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் : சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

ரூ.300 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் : சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Corportion | விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 300 கி.மீ நீளத்திற்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும், இந்தாண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், வடிகால் இல்லாத பகுதிகள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai corporation