சென்னை மேயர் பிரியாவை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அதுகுறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் கே என் நேரு மேயர் பிரியாவிடம் சற்று கடுமையாக பேசியது போல் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதற்கு மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
அதில் "அமைச்சர் என்னை செய்தியாளர்களை சந்திக்கச் சொன்னது சாதாரண ஒரு நிகழ்வு தான். அமைச்சர் கே என் நேரு என்னை மிரட்டவோ, இல்லை கடுமையான வார்த்தைகளால் பேசவோ இல்லை. எல்லா இடங்களிலும் என்னை மதிக்கக்கூடியவர். நல்ல முறையில் அவருடைய பொண்ணு போல் என்னை பார்த்துக் கொள்வார்.
அமைச்சர் ஒருமையில் பேசியதாக நினைப்பதை விட உரிமையில் பேசியதாக தான் நான் நினைக்கிறேன். கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதோடு எங்கள் துறையின் அமைச்சர் அண்ணன் கே.என் நேரு. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேயர் ஆகிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி தொடர்பாக நான் எந்த பணியை முன்னெடுத்துச் சென்றாலும் மிகுந்த ஆதரவோடு இருக்கிறார் அமைச்சர் கே என் நேரு. இதுவரை நான் கேட்டு எதுவும் வேண்டாம் என்று சொன்னதில்லை" என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.N.Nehru, Mayor Priya