முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 2,665 கட்டிடங்களின் பணி நிறுத்தம்..39 கட்டிடங்களை பூட்டி சீல் - சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 2,665 கட்டிடங்களின் பணி நிறுத்தம்..39 கட்டிடங்களை பூட்டி சீல் - சென்னை மாநகராட்சி அதிரடி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai Corporation : உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதாலும், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் கட்டுமானப்பணிகளில் விதிமீறல்கள் நடப்பதாக  கூறி 2,665 கட்டிடங்களின் பணிகளை நிறுத்த குறிப்பானை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெற்று அதற்கு மாறாக விதிமுறைகளை மீறிக் கட்டிய கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு  சென்னை மாநகராட்சியால் குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டுவதாலும், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பானை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குப் பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

' isDesktop="true" id="789639" youtubeid="7AZy10kWEqA" category="chennai">

இதன்படி, சென்னையில் 2,403 கட்டிடங்களை  சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 39 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read : நடிகர் வடிவேலுவின் "ஸ்டைல் பாண்டி" பாணியில் மற்ற வீடுகளை பூட்டி விட்டு கொள்ளை.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்

தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

First published:

Tags: Buildings, Chennai, Violation