முகப்பு /செய்தி /சென்னை / படப்பையில் டாஸ்மாக் பார் அருகே இளைஞர் மர்ம மரணம் : தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

படப்பையில் டாஸ்மாக் பார் அருகே இளைஞர் மர்ம மரணம் : தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்

சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்

Chennai Aarampakkam Murder | ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகில் ஏரிக்கரை ஓரமாக கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

படப்பை அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரம் மது விற்பனையால் தொடர் கொலைகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் பிளம்பிங், பெய்ண்டிங் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். நேற்று மது அருந்துவதற்காக ஆரம்பாக்கம் டாஸ்மார்க் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சரவணனின் உறவினர்கள் இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகில் ஏரிக்கரை ஓரமாக கழுத்தில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் சடலதை பார்த்தபோது ஆதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் சரவணன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தனர்? முன் விரோத காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனையால் இங்கு தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க வேண்டிய காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

செய்தியாளர்: சுரேஷ்

First published:

Tags: Chennai, Crime News