சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் இலக்கியா. இவர் தனது கணவரை பிரிந்து தனது அப்பா வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியை சார்ந்த ராஜா என்பவரோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை இலக்கியாவின் பெரியம்மா மகனான அண்ணன் மதன் என்ற குள்ள மதன் கண்டித்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் ராஜா இலக்கியாவின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த மதன் தட்டி கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டி உள்ளார். இதனை தடுத்த இலக்கியாவிற்கும் கையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் ராஜா மற்றும் இலக்கியாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Must Read : சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.. 1050 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மதன் என்ற குள்ளமதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் - அசோக்குமார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.