செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் சிதறிக்கிடந்தது. இதனைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சிதறிக்கிடந்த மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை மருத்துவ குழுவினரின் உதவியுடன் சேகரித்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான இருளர் குடும்பம்
வெள்ளப்பந்தல் கிராமத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கிராம மக்களிடம் நடத்திய விசாரணையில் அந்த கிராமத்தில் வயல்வெளியில் பம்ப் செட்டில் தங்கியிருந்த ஒரு இருளர் குடும்பத்தை சில தினங்களாக காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. கணவன் - மனைவி மற்றும் ஒரு குழந்தை என முன்று பேர் வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாயமான நபர்களை தேடும் பணியில் இறங்கியது காவல்துறை.
இந்நிலையில் அந்த இருளர் குடும்பத்தை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெள்ளப்பந்தல் கிராமத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது தன்னுடைய கணவர் என்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்தாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்:
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், “கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சித்ராவுக்கும் மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரன் என்ற குமாருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வெள்ளப்பந்தல் கிராமத்தை சேர்ந்த துரைபாபு என்பவரின் வயலை பார்த்துக்கொண்டு அங்குள்ள பம்பு செட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டை அடுத்த மையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதல் வெளியில் சென்றிருந்தபோது சக்திவேல் வெள்ளப்பந்தல் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது சக்திவேலும் சித்ராவும் தனிமையில் இருந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்து சந்திரன் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
இதனையடுத்து சித்ராவையும் அவரது கள்ளக்காதலனையும் சந்திரன் தாக்கியுள்ளார். பதிலுக்கு சக்திவேலும் சித்ராவும் இணைந்து சந்திரனை தாக்கியுள்ளனர். தலையில் கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலே சந்திரன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சந்திரனின் உடலை ஏரிப்பகுதியில் புதைத்துவிட்டு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தற்போது இருவரையும் கைது செய்துள்ளோம் “ என்றனர்.
சந்திரனை கொலை செய்த சித்ரா மற்றும் சக்திவேலை போலீசார் கைது செய்த போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் ஆச்சரியப்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்த போலீசாரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Crime News, Husband Wife, Illegal affair, Illegal relationship, Local News, Tamil News