செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள சித்தாமூர் அருகே அமைந்துள்ள புளியங்கரணை கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 57) . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆனந்த் (வயது 26), வீட்டில் தந்தை சொல்வதை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆனந்த் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்த நிலையில், சமீப காலமாக கஞ்சா போதைக்கும் அடிமையாகி உள்ளார்.
இதனையடுத்து தந்தை சேகர் மகனை திருந்த கோரி பலமுறை சண்டையிட்டும் அன்பாக கூறியும் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இளைஞர் ஆனந்த் வேலைக்கும் செல்லாமல் அண்ணன் கொண்டுவரும் பணம் மற்றும் தந்தை சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றை எடுத்து ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக தந்தை சேகர் மற்றும் மகன் ஆனந்த் ஆகிய இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அண்ணனுடன் சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் கம்பெனிக்கு தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய ஆனந்த், முழு குடிபோதையில் வந்துள்ளார். குடிபோதையில் வந்த ஆனந்தை அவரது தந்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் தந்தையை கண்முன் தெரியாமல் திட்டியது மட்டும் இல்லாமல் தாக்கவும் செய்துள்ளார்.
Also Read: 40 வயசாச்சு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் பேச்சுகளால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு
இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த சேகர் வேறு வழியின்றி மகன் அடிப்பதற்கு பயன்படுத்திய கட்டையை பிடுங்கி அடித்துள்ளார். இதில் தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் ஆனந்த் சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இளைஞரை மீட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆனந்த் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார், தந்தை சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைக்கு அடிமையான மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் (செங்கல்பட்டு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Chennai, Crime News, Local News, Murder, Tamil News