யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டு இருக்க, யெஸ் வங்கியில் நடைபெற்ற மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
யெஸ் வங்கி சர்ச்சை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணா கபூரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனைஅடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
DHFL நிறுவனம் 80 போலி கணக்குகளில் 12 ஆயிரத்து 733 கோடி ரூபாயை பணப்பரிவர்த்தனை செய்திருப்பதும், அதில், யெஸ் வங்கி மூலம் சில பரிவர்த்தனைகள் மேற்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில், ராணா கபூரின் மனைவி உட்பட அவரின் குடும்பத்தினர் கணக்குகளுக்கு கோடி கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கபூரின் குடும்பத்தினரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். கபூரின் மனைவி பெயரில் இருக்கும் 7 நிறுவனங்களும் இந்த விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ராணா கபூர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க லுக் அவுட் நோட்டிசும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதில் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய, பாரத ஸ்டேட் வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மார்ச் 9ம் தேதி வரை பொது மக்களும். தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. யெஸ் வங்கி மறுசீரமைக்கப்பட்ட பின்னரும், தற்போதைய ஊழியர்கள் அதே பணியில் அதே சம்பளத்தில் பணியில் இருப்பார்கள் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கி மறுசீரமைப்பிற்கு பிறகு, புதிய கிளைகளை திறக்கவோ, இருக்கும் கிளைகளை மூடவோ அனுமதிக்கப்படாது என்றும் யெஸ் வங்கியில் முதலீடு செய்யும் வங்கிகள், 3 ஆண்டுகளுக்கு தங்களது பங்குகளை 26 சதவிதத்திற்கு கீழ் குறைக்ககூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யெஸ் வங்கியை மறுகட்டமைக்கும் திட்டத்தின் கீழ் அதன் 2 ஆயிரத்து 450 கோடி மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்துப் பங்குச்சந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும், இது இணைப்பு இல்லை என்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சந்தையில் இருந்தோ, அரசிடம் இருந்தோ கூடுதல் மூலதனம் பெற வேண்டிய தேவையும் இருக்காது என்றும் கூறியுள்ளார். மேலும் யெஸ் வங்கியை மீட்டெடுப்பதில், பாரத ஸ்டேட் வங்கியின் பங்களிப்பு 10 ஆயிரம் கோடியை தாண்டாது என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
அதே சமயம் முதலீட்டாளர்கள் மற்றும் டெபாசிட்தாரர்களை காப்பாற்றவே பாரத ஸ்டேட் வங்கி இதற்கு ஒப்பு கொள்வதாகவும், பிரச்சனை வரும் போது எல்லாம் பாரத ஸ்டேட் வங்கியை அழைக்கும் போக்கு இனி மேல் இருக்காது என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read:
காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!
Also Read:
கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.