உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்நிறுவனங்கள் உணவகங்களாக அறிவிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் உணவுகளுக்கு 5 சதவீத வரியை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளது.
தற்போது விதிக்கப்பட்டு உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரி இதுவரை இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது. இதனால் உணவு விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாது என்கிறார் பொருளாதார நிபுணர் கோபாலகிருஷ்ணன்.
சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற தளத்தில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் ஆர்டர் செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. உணவிற்கு ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி, டெலிவரி கட்டணம், பேக்கிங் கட்டணம் போன்றவை வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக மற்றொரு வரி வதிக்கக்கூடாது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
பெட்ரோல் விலை உயர்வால் உணவு டெலிவரி தொழிலில் இருக்கக் கூடியவர்களுக்கு ஏற்கனவே பாதிப்பு உண்டாகியுள்ள நிலையில், வரிவிதிப்புகள் அதிகமாகும் பட்சத்தில் ஆர்டர்கள் குறையும் சூழல் உருவாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர் ஊழியர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் டெலிவரி ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நாளுக்கு நாள் இத்துறை வளர்ந்து வரக்கூடிய நிலையில், இத்தொழிலை சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இத்துறைக்கு புதிய சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.