மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள மல்லையா, கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி செய்வதை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
I invested over 4000 crores into Kingfisher Airlines to save the Company and its employees. Not recognised and instead slammed in every possible way. The same PSU Banks let India’s finest airline with the best employees and connectivity fail ruthlessly. Double standards under NDA
— Vijay Mallya (@TheVijayMallya) March 25, 2019
தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனுக்காக 4 ஆயிரம் கோடி இருப்பு வைத்திருந்ததாகவும், அதை அங்கீகரிக்காமல் வங்கிகள் மூலம் மத்திய அரசு முடக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது தலைசிறந்த விமான நிறுவனம், ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மத்திய பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
மேலும் பார்க்க:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jet Airways, Vijay Mallya